/* */

ஈரோடு மாவட்ட அளவிலான பள்ளிக் கல்வித்துறையின் கலைத் திருவிழா துவக்கம்

ஈரோடு மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 4 நாட்கள் கொண்ட மாவட்ட அளவிலான "கலைத் திருவிழா 2022" துவக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட அளவிலான பள்ளிக் கல்வித்துறையின்  கலைத் திருவிழா துவக்கம்
X

ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில்  நடைபெற கலைத்திருவிழா துவக்கி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நான்கு நாட்கள் கொண்ட மாவட்ட அளவிலான "கலைத் திருவிழா 2022 துவக்க நிகழ்ச்சி நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி தலைமையில் இன்று நடைபெற்றது. இத்திருவிழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் பங்கு பெற்ற அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் ஸ்ரீ நந்தா அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் முன்னிலையில் நடைபெற்ற இக்கலை திருவிழாவில் பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் இலக்குமி நரசிம்மன், ஈரோடு உதவி திட்ட அலுவலர் கோ. ராதாகிருஷ்ணன், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ச. வேல்முருகன் மற்றும் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ரவீச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.

இத்திருவிழாவில் ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் நவமணி கந்தசாமி சிறப்புரையாற்றினார். மூன்று நாட்கள் கொண்ட மாவட்ட அளவிலான. கலைத்திருவிழா போட்டிகளை ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் துவக்கி வைத்து பேருரையாற்றினார்.முன்னதாக 14 வட்டார பன்னி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க உள்ளார்கள். மேலும் இப்போட்டிகள் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நந்தா பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும், 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு இந்து கல்வி நிலைய மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும், மற்றும்6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு அந்தியூர் ஐடியல் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் மாவட்ட அளவில் சுமார் 10,632 மாணவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுடன் நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூாத்தி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி முனைவர் ஆறுமுகம், நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் இயக்குனர் செந்தில் ஜெயவேல் மற்றும் கல்லூரியின் முதல்வர் ரெங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆகியோர் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். விழாவின் முடிவில் ஈரோடு கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஐ.ஜோதிச்சந்திரா நன்றியுரை ஆற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 7 Dec 2022 12:15 PM GMT

Related News