/* */

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் மாற்றம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று திடீரென மாற்றம் செய்யப்பட்டார். புதிய கலெக்டராக ராஜ கோபால் சுங்கரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் மாற்றம்
X

ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று திடீரென மாற்றம் செய்யப்பட்டார். புதிய கலெக்டராக ராஜ கோபால் சுங்கரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழக அரசு நிர்வாக வசதிக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே உயர் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 42 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அந்த வகையில் ஈரோடு மாவட்ட கலெக்டராக கடந்த 16.06.2021 முதல் பணியாற்றி வந்த கிருஷ்ணனுண்ணி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் நிதித்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் ராஜ கோபால் சுங்கரா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்து உள்ளார்.

Updated On: 17 May 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...