ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தினரின் பொறியாளர் தின விழா
ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில், இந்திய பொறியியல் துறையின் தந்தை விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில், இந்திய பொறியியல் துறையின் தந்தை விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொறியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. எந்த தொழிலாக இருந்தாலும், அதன் பின்னணியில் ஒரு பொறியாளர் இருக்கிறார். இந்தியாவின் முதல் கட்டிட பொறியாளர் என போற்றப்படும் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் இந்த நாள் பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில், இந்திய பொறியியல் துறையின் தந்தை மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.செந்தில்குமார், செயலாளர் கே.சுரேஷ்பாபு, பொருளாளர் பி.பால்விஜயகுமார் ஆகியோர் விஸ்வேஸ்வரய்யா படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.