/* */

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாதவர்கள் வாகனம் பறிமுதல்

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாமல் வந்த 100க்கும் மேற்பட்டவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாதவர்கள் வாகனம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணியவேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில் பெரும்பாலானோர் தலைகவசம் அணிவதில்லை.

இருசக்கர வாகனங்களில் செல்லும்போது சாலையில் நிகழும் விபத்துகளில் உயிரிழப்பவர்கள் தலைகவசம் அணியாததே காரணமாக உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் என இருவரும் கட்டாயம் தலைகவசம் அணியவேண்டும் என உத்தரவிட்டார்.

இதன்மூலம் விபத்தின் போது ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பெரும் பாதிப்பை தவிர்க்கவே கட்டாயமாக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பன்னீர்செல்வம் பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுவரை 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஹெல்மெட் காண்பித்த பிறகு வாகனத்தை திருப்பி ஒப்படைத்து வருகின்றனர்

Updated On: 13 Oct 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  3. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  4. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  5. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  8. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!