Begin typing your search above and press return to search.
ஈரோட்டில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் தனது வாக்கை பதிவு செய்தார்
ஈரோட்டில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்
HIGHLIGHTS
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது .ஈரோடு வளையக்கார வீதியில் உள்ள அரசு பள்ளியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்றார்