கரும்பு விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்
பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் பதிவு செய்யலாம்
HIGHLIGHTS
கரும்பு பயிருக்கு பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுதிட்டத்தில் ஈரோடு மாவட்ட விவசாயிகள் காப்பீடு செய்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி விவசாயிகளை பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதி நவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்; செயல் படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ரபி 2022-23 பருவத்தில், பயிர் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண் பயிரை பொருத்தவரையில், நடப்பு ரபி 2022-23பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய, கரும்பு பயிர், பிர்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள 30 பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.3020-செலுத்த வேண்டும்.மேலும் கரும்பு பயிருக்கான காப்பீட்டுத் தொகை ஏக்கருக்குரூ. 60,400- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு செய்யும் முறை: அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களைச் சார்ந் தகடன் பெறும்; விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களைச் சார்ந்த கடன் பெறா விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலினை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்,ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகலாம்.
காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்: மார்ச் 31, 2023 ஆம் தேதி கரும்பு பயிருக்கு காப்பீடு செய்யக் கடைசி நாளாகும்.எனவே பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து, தங்கள் பயிருக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு ஈரோடு மாவட்டஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.