/* */

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி: தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி:  தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது
X

ஈரோடு கிளைச்சிறை.

ஈரோடு சூளை சி.எஸ். நகரை சேர்ந்தவர் வள்ளல் பாபு. தொழிலதிபரான இவர் ஈரோடு கங்காபுரத்தில் சோப்பு தயாரிக்கும் நிறுவனம் உள்பட சிறு சிறு நிறுவனங்களை நடத்தி வந்தார். மேலும் ஈரோடு அசோகபுரம் மெயின் ரோட்டில் ஏலச் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். தினசரி வசூல், வார வசூல், மாத வசூல் என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தார். 250-க்கும் மேற்பட்ட மக்கள் இவர் நடத்தி வந்த ஏலச்சீட்டில் பணம் செலுத்தி வந்தனர்.

இவர்களுக்கு ஏலச் சீட்டு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். கிட்டத்தட்ட ரூ. 10 கோடி வரை இவ்வாறு மோசடி நடந்துள்ளது. இதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தனர். பின்னர் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் திடீரென தலைமறைவானார். இந்நிலையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தங்களது பணத்தை திருப்பித்தர வலியுறுத்தியும், தலைமறைவாக இருக்கும் தொழிலதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பவானி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் இது குறித்து புகார் செய்தனர். தொடர்ந்து குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஏலச் சீட்டில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருக்கும் தொழில் அதிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் வீரப்பன் சத்திரம் போலீசார் தலைமறைவாக இருந்த தொழிலதிபர் வள்ளல் பாபுவை கைது செய்தனர். இன்று தொழிலதிபர் வள்ளல் பாபு சம்பத் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 26 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து