/* */

நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு

நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத்தர வேண்டும் என எ ஸ்.பி. அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.

HIGHLIGHTS

நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
X

ஹரிபாபு.

ஈரோடு எஸ் .பி .அலுவலகத்திற்கு ஞானிபாளையம் பகுதியை சேர்ந்த இந்துமதி (வயது 42) என்பவர் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது கணவர் பெயர் ஹரிபாபு. பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வந்தோம். இந்நிலையில் கடந்த 15.2.2019 ஆம் ஆண்டு திடீரென எனது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அவர் வெளியே செல்லும் போது 30 ஆயிரம் பணம், 7 பவுன் நகை மற்றும் எனக்கு சொந்தமான 1800 சதுர அடி நில பத்திரத்தையும் கொண்டு சென்றார். இன்று வரை எனது கணவர் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார் எங்கு போனார் என தெரியவில்லை. இதுகுறித்து வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்றுவரை போலீசாரும் எனது கணவரை கண்டுபிடித்து தரவில்லை. போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து கேட்டால் எந்த ஒரு பதிலும் சொல்வதில்லை. வீட்டில் இருக்கும் ஆடுகளை விற்று செலவு செய்து வருகிறேன். எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாயமான எனது கணவரையும், நகை பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Updated On: 24 Feb 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  4. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  8. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!