/* */

ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு.

HIGHLIGHTS

ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
X

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளி சிகிச்சை பிரிவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 51). இவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளி சிகிச்சை பிரிவில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து உடல்நிலை சரியில்லாததால் பிரகாஷ் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் பிரகாஷ் அங்கு உள்ள கழிவறைக்கு சென்றார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்து கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அதே பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நோயாளி கழிவறைக்கு சென்றபோது பிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை தலைமை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 16 Oct 2021 6:26 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை