/* */

ஆணவக் கொலையில் இருந்து காப்பாற்ற கோரி கணவன் காவல் நிலையத்தில் புகார்

காதல் மனைவியை ஆணவக் கொலையில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

HIGHLIGHTS

ஆணவக் கொலையில் இருந்து காப்பாற்ற கோரி கணவன் காவல் நிலையத்தில் புகார்
X

மனு கொடுக்க வந்த செல்வம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சலங்கை நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வன், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தனியார் நிறுவன ஊழியர். பவானி குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மகள் இளமதியும், செல்வமும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்துள்ளனர். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் திராவிடர் விடுதலை கழக மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் கடந்த 2020 ஆண்டு பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டு தனியே வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து இளம்மதியின் பெற்றோர் அடியாட்களை வைத்து செல்வனை ஜாதிப் பெயரை கூறி அடித்து துன்புறுத்தி இளமதியை கடத்திச் சென்றதாக்க கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையில் புகார் அளித்தும் விசாரணை நடைபெறவில்லை.

மேலும் தற்போது இளமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆணவக்கொலை செய்யக்கூடிய நிலையில் தற்போது இருப்பதாகவும், எனவே எவ்வித ஆபத்தும் இன்றி காப்பாற்றவும், தனது மனைவியை மீட்டு உரிய பாதுகாப்பு தருமாறு காவல் கண்காணிப்பாளரிடம் செல்வம் மனு அளித்தனர்.

Updated On: 14 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  2. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  3. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  5. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  6. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  7. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  8. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  9. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!