Begin typing your search above and press return to search.
ஈரோட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
ganja news in tamil-ஈரோடு நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ganja news in tamil-ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உட்பட போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவது மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
அதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலைய சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (29) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் சோதனையில் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைதுசெய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.