ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில்ஆர்ப்பாட்டம் நடந்தது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்

ஈரோடு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை வகித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அதானி அம்பானிக்கு எஸ்.பி.ஐ பங்குகளை தாரைவாய்ப்பு, எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை, மேலும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டதற்கு மத்திய அரசின் 9 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முருகேஷ், கதிர்வேல், ரவி, ஈஸ்வரமூர்த்தி, ராவத் குமார், மூத்த நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சீதாபதி பழனிவேல், வடுகப்பட்டி பேரூராட்சி தலைவர் விஸ்வநாதன், பேரூர் தலைவர்கள் வேலுச்சாமி, சுந்தரம், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 19 March 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி