/* */

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில்ஆர்ப்பாட்டம் நடந்தது

HIGHLIGHTS

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்

ஈரோடு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை வகித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அதானி அம்பானிக்கு எஸ்.பி.ஐ பங்குகளை தாரைவாய்ப்பு, எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை, மேலும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டதற்கு மத்திய அரசின் 9 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முருகேஷ், கதிர்வேல், ரவி, ஈஸ்வரமூர்த்தி, ராவத் குமார், மூத்த நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சீதாபதி பழனிவேல், வடுகப்பட்டி பேரூராட்சி தலைவர் விஸ்வநாதன், பேரூர் தலைவர்கள் வேலுச்சாமி, சுந்தரம், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 19 March 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  4. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  8. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!