/* */

வரும் 5ம் தேதி முதல் ஈரோடு புத்தகத் திருவிழா: நிகழ்ச்சி நிரல் வெளியீடு

Erode Book Festival-ஈரோடு புத்தகத் திருவிழா நிகழ்ச்சி நிரல் மற்றும் சிறப்பு பேச்சாளர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வரும் 5ம் தேதி முதல் ஈரோடு புத்தகத் திருவிழா: நிகழ்ச்சி நிரல் வெளியீடு
X

ஈரோடு புத்தகத் திருவிழா-2022.

Erode Book Festival-மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில், 18வது ஈரோடு புத்தக திருவிழா சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில் வரும் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. புத்தக திருவிழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வரும் 5ம் தேதி மாலை 5 மணிக்கு துவக்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, தினமும் மாலை 6மணிக்கு சிந்தனை அரங்க நிகழ்வுகள் நடக்க உள்ளது.

இதன்படி, 6ம் தேதி மாலை கலையும் இலக்கியமும், மக்களின் மன மகிழ்ச்சிக்காகவா? மறுமலர்ச்சிக்காகவா? என்ற தலைப்பில் பேராசி ரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன் றம் நடைபெற உள்ளது. 7ம் தேதி மாலை 'ஊசியில் ஒரு கிழிசல்' என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் காதர், 'கேள்விக்கென்ன பதில்' என்ற தலைப்பில் முனைவர் சங்கர சரவணன் ஆகியோர் பேசுகின்றனர். 8ம் தேதி மாலை அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது வழங்கும் நிகழ்ச்சியில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் பங்கேற்று வழங்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து 'யுரேகா, யுரேகா' என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார். 9ம் தேதி மாலை 10 நாடுகளை சேர்ந்த தமிழ் ஆளுமைகள் பங்கேற்கும் பன்னாட்டு தமிழரங்கமும், 10ம் தேதி மாலை வாசிப்பு என் வாழ்விலும் சினிமாவிலும்' என்ற தலைப்பில் எடிட்டர் பி.லெனின். 'நிமிர்ந்த நன்னடை' என்ற தலைப்பில் நடிகை சுஹாசினி ஆகியோர் பேசுகின்றனர்.

11ம் தேதி மாலை 'நல்ல பொழுதையெல்லாம்' என்ற தலைப்பில் சுகி.சிவம், 12ம் தேதி ஜேம்ஸ் வசந்தனின் இசைக்குழுவினர் சங்க தமிழ் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி மாலை 'சங்க இலக்கியச்சாறு' என்ற தலைப்பில் தமிழரு மணியன், 14ம் தேதி மாலை 'திருக்குறள் 100' என்ற தலைப்பில் நடிகர் சிவக்குமார் பேசுகிறார். இதில், அவர் இரண்டரை ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட திருக்குறள் ஆராய்ச்சியை தொகுத்து 2.30 மணி நேரம் பேச உள்ளார்.

மேலும் 15ம் தேதி மாலை ஸ்ரீ ராம் சர்மா குழுவினரின் வேலுநாச்சிஎன்ற இசையார்ந்த நடன நாடகம் நடக்கிறது. 16ம் தேதி மாலை நடைபெறும் இறுதி நாள் நிகழ்ச்சியில் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பேச உள்ளார். தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தக விற்பனை அரங்குகள் திறக்கப்பட்டிருக்கும்.

புத்தக திருவிழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்களும் கலந்து கொள்கின்றன. இதற்காக 230 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழாவுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என மக்கள் சிந்தனைப் பேரவை மாநில தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Feb 2024 6:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’