ஈரோட்டில் நாளை அண்ணாமலை பங்கேற்கும் பா.ஜ. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ஈரோடு சோலாரில் நாளை அண்ணாமலை பங்கேற்கும் பா.ஜ. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையம் அருகில் நாளை பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்.
இதுகுறித்து பாரதீய ஜனதா கட்சியின் ஈரோடு மாவட்ட ஊடக பிரிவு தலைவர் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டுகால நல்லாட்சியின் சிறப்புகளை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சோலார் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம் தலைமை தாங்குகிறார். மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சி.சரஸ்வதி முன்னிலை வகிக்கிறார். பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
எனவே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.