Begin typing your search above and press return to search.
பவானிசாகர் அருகே குட்டிகளுடன் கரும்பு லாரியை வழிமறித்த யானைகள்
பவானிசாகர் அருகே குட்டிகளுடன் கரும்பு லாரியை வழிமறித்த யானைகளால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே லாரி ஏற்றி வந்த லாரியை காட்டு யானைகள் வழிமறித்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் உணவு தேடி சாலையை கடப்பது வழக்கம். இந்த நிலையில், இன்று காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை காட்டு யானைகள் குட்டியுடன் வழிமறித்தன. இதைத்தொடர்ந்து அந்த யானைகள் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்புகளை தும்பிக்கையால் பறித்து தின்றது. இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.