/* */

அந்தியூர்: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

அந்தியூர் அருகே மூட்டு வலி குணமாகவில்லை என்ற வருத்தத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை.

HIGHLIGHTS

அந்தியூர்: விஷம் குடித்து முதியவர் தற்கொலை
X

பைல் படம்.

ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி சக்தி நகர் வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72). விவசாயி. இவருக்கு நீண்ட நாட்களாக மூட்டு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் மூட்டு வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த ராமசாமி வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது மகன் தமிழ்வாணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு வந்து ராமசாமியை மீட்டு ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 11 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?