/* */

கோபிச்செட்டிப்பாளையத்தில் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஜீப் ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டதால், எதிரில் வந்த மொபட் மீது மோதியதில் இருவர் படுகாயம்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையத்தில் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் அதியமான் (வயது 64). மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், இன்று காலை அதியமான் வழக்கம்போல் அலுவலகத்தில் இருந்து மின்வாரிய அதிகாரிகளுடன், ஜீப்பில் கோபியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோபி மொடச்சூர் சாலை, வடுகபாளையம் பிரிவு அருகே வந்தபோது, திடீரென அதியமானுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, ஜீப்புக்குள் மயங்கி விழுந்து இறந்தார்.


இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அந்த வழியாக மொபட்டில் வந்த, வடுகபாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகள் பானுமதி ஆகியோர் மீது மோதி, சுவரின் மீது மோதி ஜீப் நின்றது. இதில் படுகாயமடைந்த இருவரையும், கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம், குறித்து கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?