ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் அமைதி பேரணி திங்கட்கிழமை நடைபெற்றது.
HIGHLIGHTS
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் அமைதி பேரணி திங்கட்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் திங்கட்கிழமை (நேற்று) அனுசரிக்கப்பட்டது. இந்நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அவரது திருவுருவ சிலை மற்றும் புகைப்படத்தை வைத்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து துவங்கிய அமைதி பேரணி ஊர்வலம் முனிசிபல் காலனி கருணாநிதி சிலை அருகே முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், மாநில கழக நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி ஜெயக்குமார், மற்றும் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் எம்பி கந்தசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்ல பொன்னி, சின்னையன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி மற்றும் மாநில, மாவட்ட, மாமன்ற உறுப்பினர் மகளிர் அணியினர், மாநகர, பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.