/* */

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 243 பணியிடங்களுக்கு தொடரும் நேர் காணல்

ஈரோடு மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்து வருகிறது.

HIGHLIGHTS

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 243 பணியிடங்களுக்கு தொடரும் நேர் காணல்
X

ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜ்குமார் தலைமையிலான அலுவலர்கள் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 243 பணியிடங்களுக்கு, 12 ஆயிரத்து 137 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தற்போது நேர்காணல் நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 233 விற்பனையாளர்கள், 10 கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக 12 ஆயிரத்து 137 பேர் விண்ணப்பித்துள்ளனர். இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த 15-ம் தேதி திண்டலில் உள்ள ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை மையத்தில் தொடங்கியது. ஒரு நாளைக்கு 1,500 பேர் வீதம், வரும் 24-ம் தேதி வரை நேர்காணல் நடக்கவுள்ளது. ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

அப்போது, அவர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? நேர்காணலுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகரும் நாற்காலி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வந்துள்ள பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்திருப்பதை பார்வையிட்டார். உடன் ஈரோடு துணைப்பதிவாளர் (பொதுவிநியோகத்திட்டம்) கந்தசாமி, கோபி சரக துணைப் பதிவாளர் சௌந்திரராஜன் ஆகியோர் இருந்தனர்.

விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்களை நகல்கள் எடுப்பதற்கு வசதியாக நேர்காணல் மையத்திலேயே ஜெராக்ஸ் எந்திரம் வசதி, செல்போன் எண்களை ஒப்படைப்பதற்கான பாதுகாப்பு பெட்டக வசதி, சான்றிதழ் சரிபார்ப்பு குழு எண்கள் தொடர்பான பிளக்ஸ் பேனர் மற்றும் விண்ணப்பதாரர்கள் அளிக்க வேண்டிய சான்றிதழ்கள் குறித்த அறிவிப்பு தட்டி ஆகியவை வைக்கப்பட்ட்டிருந்தன. இந்த ஏற்பாடுகளை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் ஆய்வு செய்தார்.

வருகிற 24-ம் தேதி வரை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த நேர்காணலுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இணைப்பதிவாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மேலும், நேர்காணலில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 21 Dec 2022 6:31 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்