/* */

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.25.65 லட்சம் உண்டியல் காணிக்கை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலில் பக்தர்கள் ரூ.25.65 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

HIGHLIGHTS

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.25.65 லட்சம் உண்டியல் காணிக்கை
X

சென்னிமலை முருகன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வாராவாரம் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களிலும், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், இக்கோயிலின் உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சாமிநாதன் தலைமையில், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கோவில் ஆய்வாளர் ரவிக்குமார், அயல்பணி ஆய்வாளர் செல்வி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

இந்த பணியில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், கோயில் பணியாளர்கள், அறச்சலூர் நவரசம் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில், 25 லட்சத்து 64 ஆயிரத்து 795 ரூபாயை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும், 72 கிராம் தங்கம் மற்றும் 2,810 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக இருந்தது.

Updated On: 9 Jun 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...