Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் பாதிப்பு
Erode district treatment for corona has increased
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. மாவட்டத்தில் நேற்று 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 54 பேரில் 4 பேர் குணமாகினர். தற்போது 68 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த மே மாதம் வரை கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில், படிப்படியாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தற்போது, ஈரோடு தொற்று அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் பரிசோதனையை அனைவருக்கும் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் முக கவசம் அணியாதவர்களுக்கு அபாராதம் விதிக்கப்பட உள்ளது.