/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2ம் அலையின்போது அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 1,700 வரை பதிவானது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை உடனுக்குடன் கண்டறியும் வகையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பு அதிகரித்ததையடுத்து தினமும் 10 ஆயிரம் வரையிலான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பானது நேற்று பூஜ்ஜியம் என்ற நிலைமையை அடைந்தது. இருப்பினும், மாவட்டத்தில் தற்போது தினமும் ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 26 லட்சத்து 80 ஆயிரத்து 984 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 16 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  3. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  7. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  8. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  10. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...