/* */

ஈரோடு மாவட்டத்தில் 1,189 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 6-வது கட்டமாக 1,189 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்றும், இன்றும் நடந்தது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 1,189 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையை கட்டுப்படுத்திட 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்ட தடுப்பூசி முகாமில், 97 ஆயிரத்து 198 பேருக்கும், 2-வது கட்ட தடுப்பூசி முகாமில் 48 ஆயிரம் பேருக்கும், 3-வது கட்ட தடுப்பூசி முகாமில் 84 ஆயிரத்து 400 பேருக்கும், 4-ம் கட்ட தடுப்பூசி முகாமில் 56 ஆயிரத்து 924 பேருக்கும், 5-வது கட்ட தடுப்பூசி முகாமில் 71 ஆயிரத்து 960 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் 6-வது கட்ட தடுப்பூசி முகாமானது மாவட்டத்தில் 1,189 மையங்களில் வெள்ளி (22ம்தேதி) மற்றும் சனி (23ம் தேதி) என இரு நாட்களாக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 50 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 78 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகளில் தலா ஒரு மையம் மூலமும், 40 நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம்களுக்கு காலை முதல் ஆர்வமுடன் சென்று முதல் தவணை மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Updated On: 23 Oct 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  2. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  3. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  4. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  5. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  6. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  7. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  8. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  9. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  10. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!