ஈரோட்டில் மலைக்கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா
Erode news, Erode news today - ஈரோடு மாவட்டம், கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 18 மலை கிராம மக்களின் மருத்துவ பணிக்காக நகைச்சுவை நடிகர் பாலா ஆம்புலன்ஸ் வழங்கினார்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 18 மலை கிராம மக்களின் மருத்துவ பணிக்காக நகைச்சுவை நடிகர் பாலா ஆம்புலன்ஸ் வழங்கினார்.
குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. இவர் தன்னால் முடிந்த வரை, பலருக்கு உதவிகளை செய்துவருகிறார். தற்போது, ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 18 மலை கிராம மக்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.
போதிய வாகன வசதிகள் இல்லாததால் பாம்பு கடி போன்றவற்றால் கிராம மக்கள் உயிரிழக்கும் அவல நிலை இங்கு நிலவுகிறது. இதனை அறிந்த நடிகர் பாலா, ரூ.5 லட்சம் செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி அந்த கிராம மக்களுக்காக வழங்கியுள்ளார்.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (நேற்று) நடைபெற்றது. உணர்வுகள் அமைப்பு தலைவர் மக்கள் ராஜன் பெற்றுக்கொண்டார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் மேயர் நாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.