/* */

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று; இன்று 1,220 பேர் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 1,220 பேருக்கு கொரோனா உறுதியானது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று; இன்று 1,220 பேர் பாதிப்பு
X

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக தினமும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர். நேற்றைய பாதிப்பு ஆயிரத்தை கடந்தது.

அதேபோல் தொற்று பரவல் சதவீதமும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அதாவது நேற்று 4 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில், 1066 பேருக்கு உறுதியானது. இதனால் தொற்று பரவல் சதவீதம் 23.1 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த மாதம் வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் சுமார் ஒரு சதவீதத்தினர் மட்டுமே தொற்று பாதிப்புக்கு உள்ளானார்கள். இது தற்போது 25.5 சதவீதத்தை கடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இன்று ஒரே நாளில் 1,220 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 418 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 406 பேர் குணமடைந்தார்கள்.இன்று மட்டும் 554 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள்.

தினமும் ஆயிரம் பேர் புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. தற்போது 6 ஆயிரத்து 291 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். இருந்தாலும், தொற்று பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவதால் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை கொரோனாவுக்கு 721 பேர் பலியாகி உள்ளனர்.

Updated On: 23 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?