/* */

பவானி அருகே செல்போன் பேசியதால் கண்டிப்பு: கல்லூரி மாணவி தற்கொலை

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே செல்போன் பேசியதை கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பவானி அருகே செல்போன் பேசியதால் கண்டிப்பு: கல்லூரி மாணவி தற்கொலை
X

பைல் படம்

ஈரோடு பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை அரிஜன காலனியை சேர்ந்தவர் லட்சுமணன் (42). இவரது மகள் கீர்த்தனா (17). இவர், நம்பியூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு தமிழ் இலக்கியம் படித்து வந்தார்.

இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை கவனித்த கீர்த்தனாவின் தந்தை லட்சுமணன், நேற்று அவரிடம் இருந்து போனை பிடுங்கி வைத்து கொண்டதாக தெரிகிறது.

இதனால், மனமுடைந்த கீர்த்தனா தூக்கிட்டு கொலைக்கு முயன்றுள்ளார். நீண்ட நேரம் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த லட்சுமணன், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது, கீர்த்தனா தூக்கில் தொங்கியுள்ளார். அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கீர்த்தனாவை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து, அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 23 Sep 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்