தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஈரோடு ஆட்சியர் மரியாதை
Erode news- தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, ஈரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஞாயிற்றுக்கிழமை (இன்று) மரியாதை செலுத்தினார்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, ஈரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஞாயிற்றுக்கிழமை (இன்று) மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் தீண்டாமை, பெண்ணடிமை, மத மூட நம்பிகைகள் ஆகியவற்றை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதும் ஒரு ஓயாத பிரச்சாரத்தை மேற்கொண்டவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவருடைய 145வது பிறந்த தினம் (செப்.,17) இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவப்படம் மற்றும் அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்..
இந்நிலையில், ஈரோட்டில் உள்ள பெரியார் - அண்ணா நினைவகத்தில், அரசின் சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாவுக்கு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், உதவி அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.