/* */

ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை

ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு தீவிர சோதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை
X

ஈரோடு மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர், ஈரோடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சில மணி நேரங்களில் வெடிக்கும் எனவும் தெரிவித்து தொலைபேசியை துண்டித்தனர். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன், ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்களை சோதனை செய்தனர்.

இந்நிலையில், ஈரோடு பேருந்து நிலையம், மணிக்கூண்டு, ஈரோடு ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த ஈரோடு காவல்துறையினர், தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Updated On: 9 Dec 2021 1:54 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்