/* */

குட்டையில் நீராடிய காட்டு யானைகள்; சாலையில் குவிந்த மக்களை விரட்டிய வனத்துறை

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனக்குட்டையில் காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் நீராடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

குட்டையில் நீராடிய காட்டு யானைகள்; சாலையில் குவிந்த மக்களை விரட்டிய வனத்துறை
X

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனச்சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையை யானைகள் தங்களது குட்டிகளுடன் சாலையை கடந்து செல்வது வழக்கம்.

கடந்த சில மாதங்களாக தமிழக - கர்நாடக எல்லை காரப்பள்ளம் அருகே யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறைப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் காரப்பள்ளம் அருகே சாலை ஓரத்தில் உள்ள வனக்குட்டையில் யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து கொண்டு நீண்ட நேரம் நீராடி விளையாடியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி வேடிக்கை பார்த்ததோடு தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.

அப்போது அங்கு வந்த வனத்துறையினர் வாகன ஓட்டிகளை யானைகளை தொந்தரவு செய்யாமல் செல்ல வேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 8 Aug 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி