/* */

பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 5,849 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 5849 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 5,849 கனஅடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவு 105 அடி ஆகும்.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பவானி சாகர் அணை கடந்த சில நாட்களாக 102 அடியில் தொடர்ந்து இருந்து வருகிறது.

அணையின் விதிப்படி 102 அடி நிரம்பியதும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிட வேண்டும். அதன்படி பவானி ஆற்றுக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரத்து 849 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு 200 கன அடியும், காளிங்கராயன் பாசத்திற்கு 486 கன அடியும், பவானி ஆற்றுக்கு 5114 கன அடி என மொத்தம் 5800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 14 Sep 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  5. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  8. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...