/* */

தாளவாடி அருகே கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்டு யானைகள்!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே, கூட்டம் கூட்டமாக யானைகள் சாலையை கடந்து செல்வதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தாளவாடி அருகே கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்டு யானைகள்!
X

தாளவாடியில் இருந்து தலமலை வழியாக திம்பம் செல்லும் சாலையில்,  கூட்டம் கூட்டமாக குட்டிகளோடு  செல்லும் யானைகள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், மான்கள் காட்டுயானைகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் வனவிலங்குகள் அவ்வப்போது காடுகளை விட்டு வெளியேறி சாலைகள் சுற்றிதிரிவது வழக்கம்.

இந்நிலையில், தாளவாடியில் இருந்து தலமலை வழியாக திம்பம் செல்லும் சாலையில் காட்டு யானைகள் தனது குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றன. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். யானைகள் முழுமையாக கடந்து செல்லும் வரை, பீதியில் இருந்தனர்.

இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில், தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு காட்டுயானைகள் வெளியேறும். மேலும் சாலையோரம் நின்று தீவனங்களை உட்கொண்டு விட்டு சாலையை கடந்து செல்வது வழக்கம்.

இந்த காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் இருக்கும்போது ஆக்ரோஷத்தோடு மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது. எனவே சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி புகைப்படங்கள், செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். என்று கூறினர்.

Updated On: 8 Jun 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது