/* */

1 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்

பவானிசாகர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட சுமார் 1 இலட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்.

HIGHLIGHTS

1 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்
X

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எரங்காட்டூர் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடாசலம் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சத்தியமங்கலம் சாலையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட சுமார் 1 இலட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் காரில் வந்த நபர் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பதும் இவர் அப்பகுதியில் புடவை வியாபாரம் செய்து வருவதாகவும் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள துணிக்கடையில் ஆர்டர் எடுக்க மாதிரி புடவைகளை எடுத்து வந்ததாகவும் தெரியவந்தது. அவர் எடுத்துவந்த புடவைகளுக்கு உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் அவரிடமிருந்த 143 புடவைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 20 March 2021 12:21 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?