/* */

கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி

கீழ்பவானி கால்வாய் கரை உடைப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் முதற்கட்டமாக மீண்டும் 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி
X

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து நாற்பத்தி ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வருடாவருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

அதேபோல், இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட கரை உடைப்பின் காரணமாக அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் பாசனத்திற்காக 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, படிப்படியாக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

இன்று காலை 6 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 30.31 டிஎம்சி ஆகவும், அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 813 கன அடியாகவும் உள்ளது.

தற்போது அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 488 கனஅடி நீர், கீழ்பவானி வாய்க்காலில் 200 கனஅடி நீர் பவானி ஆற்றில் 112 கன அடி நீர் என மொத்தம் 800 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 12 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்