/* */

சித்தோடு அருகே வீட்டின்பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை : பொதுமக்கள் அச்சம்

சித்தோடு அருகே வீட்டின்பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சித்தோடு அருகே வீட்டின்பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை : பொதுமக்கள் அச்சம்
X

கொள்ளை மாதிரி படம்.


சித்தோடு அருகேயுள்ள நடுப்பாளையம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் அர்த்தனாரி மகன் குமரவேல் (53). இவர், சித்தோடு ஆவின் பால் பண்ணையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஹேமலதாவுக்கும், புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவபிரகாசத்துக்கும் கடந்த 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

மறு அழைப்புக்காக நேற்று முன்தினம் குமரவேலும், அவரது மனைவியும் புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டு, நேற்று வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ, பெட்டி ஆகியவை திறந்து கிடந்ததோடு, துணிகள் சிதறிக் கிடந்தன. மேலும், பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பிரேஸ்லெட், மோதிரம், கம்மல் உள்ளிட்ட பத்தரைப் பவுன் தங்க நகைகளைக் காணவில்லை. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதேபோன்று, வீட்டின் மேல் மாடி வீட்டின் அறைக்கதவும் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. அங்கு, பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. மர்ம நபர்கள் யாரேனும் பூட்டை உடைத்து இத்துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து, குமரவேல் அளித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 7 Sep 2021 5:29 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!