/* */

ஆசனூர் அருகே ஜெடேருத்ரசாமி கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஆசனூர் அருகே ஜெடேருத்ரசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

HIGHLIGHTS

ஆசனூர் அருகே ஜெடேருத்ரசாமி கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
X

சிக்குன்சேபாளையம் கிராமத்தில் நடைபெற்ற தேரோட்டம்.

தாளவாடியை அடுத்த ஆசனூர் அருகே உள்ள கேர்மாளம் சிக்குன்சேபாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜெடேருத்ரசாமி, கும் பேஸ்வரசாமி, மாதேஸ்வரசாமி கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. மலைக் கிராம மக்களின் காவல் தெய்வமாக இந்த கோவில்கள் விளங்குகிறது.

இந்த கோவில் தேர் திருவிழா கடந்த 19-ந்தேதி தீபாராதனையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சாமிக்கு தினமும் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றுவந்தன. இதையடுத்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

இதற்காக சுமார் 30 அடி உயரமுள்ள தேரில் சாமி உற்சவர் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முன்பு இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடியபடி வந்தார்கள். தேர் கோவிலில் நிலை சேர்ந்ததும் ஜெடேருத்ரசாமி, கும்பேஸ்வரசாமி, மாதேஸ்வரசாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் கடம்பூர், கேர்மாளம், தாளவாடி, ஆசனூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி ஆசனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 20 Nov 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!