/* */

சத்தியமங்கலம் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு தீவிரம்

சத்தியமங்கலம் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு தீவிரம்
X

சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை ஓரங்கள், தாழ்வான பகுதிகள் மற்றும் டயர்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கியுள்ளது. நீண்ட நாள்களாக மழைநீர் தேக்கத்தால் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதால் நகராட்சி மக்கள் குடியிருப்புகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அரசு அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் அருகில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள இடங்கள், பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருள்கள் உள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்படும் என்றும் நீண்ட நாள் பயன்பாடின்றி உள்ள பொருள்களில் தண்ணீர் தேங்கினால் அதனை சுத்தம் செய்யுமாறு சத்தியமங்கலம் நகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On: 26 Nov 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!