/* */

புஞ்சைபுளியம்பட்டியில் மளிகை கடையில் பட்டாசு பதுக்கியவர் கைது

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டியில் மளிகை கடையில் பட்டாசு பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

புஞ்சைபுளியம்பட்டியில் மளிகை கடையில் பட்டாசு பதுக்கியவர் கைது
X

புஞ்சை புளியம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் புளியம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது புளியம்பட்டி காந்திநகரில் பட்டாசு பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து புளியம்பட்டி போலீசார் காந்திநகரில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மைக்கேல் (வயது 48) என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். அந்த மளிகை கடையில் சோதனை செய்தபோது அனுமதியின்றிபட்டாசுகள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் பட்டாசுகளை உரிய அனுமதி இன்றி வாங்கி அதை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ் மைக்கேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் பட்டாசுகள் பறிமுதல் செய்தனர்.

Updated On: 3 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி