/* */

கர்நாடகவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: ஈரோட்டை சேர்ந்தவர் கைது

கர்நாடக மாநிலம், மைசூரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தாளவாடியை சேர்ந்த இளைஞர் கைது.

HIGHLIGHTS

கர்நாடகவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: ஈரோட்டை சேர்ந்தவர் கைது
X

சூசைபுரம் கிராமத்தில் மைசூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம், மைசூர் சாமுண்டி கோவில் அருகே கடந்த 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7.30 மணிக்கு தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த சிலர் அந்தப் பெண்ணை வனப்பகுதிக்குள் இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பலாத்காரம் நடைபெற்ற இடத்தில் இருந்த செல்போன் டவர் மூலம் ஆய்வு மேற்கொண்டதில் ஐந்து பேர் கொண்ட கும்பல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 5 பேரில் ஒருவர் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி சூசைபுரம் கிராமத்தில் வசிக்கும் பழனிச்சாமி என்பவரது மகன் பூபதி (28) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மைசூரிலிருந்து வந்த போலீசார் பூபதியை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். மீதமுள்ள நான்கு பேர் யார் என்பது குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செயயப்பட்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 Aug 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்