/* */

சத்தியமங்கலம் அருகே சாணத்தை தூக்கியெறியும் வினோத திருவிழா

ஒருவொருக்கு ஒருவர் சாணத்தை வீசியெறியும் விநோத திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே சாணத்தை தூக்கியெறியும் வினோத திருவிழா
X

சாணி எரியும் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.

தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் தீபாவளி பண்டிகையை அடுத்துவரும் மூன்றாவது நாள், சாணியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்தாண்டுக்கான விழா காலையில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊர்குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமிவை வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

ஊர்தெய்வமான பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்கள் வெற்றுடம்புடன் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் கோயில் பின்புறம் குவித்து வைக்கபட்டு உள்ள சாணத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. அங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டையாக வடிவமைத்தனர். இதில் பங்கேற்ற பக்தர்கள், ஒருவருக்கொருவர் சாணத்தை அடித்துக்கொண்டு வீசி மகிழ்ந்தனர்.

இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை பெண்கள், ஆர்வத்துடன் பார்த்து கைதட்டி உற்சாகபடுத்தி ரசித்தனர். நிகழ்ச்சிக்கு பிறகு பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர். பக்தர்கள் விளையாடிய சாணத்தை விவசாயிகள் ஆர்வத்துடன் எடுத்து சென்று தங்கள் விளைநிலங்களில் இட்டனர். இதனால் தங்கள் விவசாய நிலத்தில் பயிர்கள் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர் ஒருவர் எடுத்துச்சென்று சாணங்கள் கிடக்கும் குப்பை மேட்டில் எறிந்து விட்டார். இவ்வூரைச் சேர்ந்த மாட்டு வண்டி ஒன்று குப்பைமேட்டின் மீதேறிச்செல்லும்போது ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. உடனே இதைக்கண்ட மக்கள் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரிய வந்தது. அப்போது ஒரு சிறுவனின் கனவில் வந்த சுவாமி, தீபாவளி முடிந்து மூண்றாவது நாள் சாணத்திலிருந்து தான் மீண்டெழுந்ததின் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என கூறியதாகவும் இதையடுத்து மூதாதையர் வழிகாட்டுதல் படி இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர்.

Updated On: 7 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?