/* */

கோழி வியாபாரியிடமிருந்து 5.50 லட்சம் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கோழி வியாபாரியிடமிருந்து 5.50 லட்சம் பறிமுதல்
X

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசனூர் அரேப்பாளையம் பிரிவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தனபிரனேஷ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மைசூர் சாலையிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பிக்கப் வேனில் வந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் மலையாண்டல்லி பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பதும் இவர் கோழி வியாபாரம் செய்து வருவதும், கர்நாடக மாநிலம் மங்களூரில் கோழி வியாபாரம் முடித்துவிட்டு பணம் பெற்றுக்கொண்டு பல்லடம் சென்று கொண்டிருப்பதும் தெரியவந்தது. அவர் எடுத்துவந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் அவரிடமிருந்த 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 21 March 2021 11:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி