/* */

பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் 5 டி.எஸ்.பி-களுக்கு கொரோனா!

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த ஐந்து டி.எஸ்.பிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் 5 டி.எஸ்.பி-களுக்கு கொரோனா!
X

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. குரூப் தேர்வு எழுதி தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு, இங்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் குரூப்-1 தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் 25 பேருக்கு, கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முதல், இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அந்த பயிற்சியானது இன்றுடன் முடிவடைந்தது.

இதனிடையே, பயிற்சி பெற்ற 25 டிஎஸ்பி-களில் சிலருக்கு, கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல், தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டதால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 டிஎஸ்பி-களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் மற்ற 20 டி.எஸ்.பிக்கள், பயிற்சி நிலைய முதல்வர், ஊழியர்கள் என முப்பது பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அந்த பயிற்சி நிலையத்திலேயே உள்ள தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 22 April 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்