/* */

புரட்டாசி பிறப்பு : ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மற்றும் விலை சரிவு

புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி பவானி அருகே நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மற்றும் விலை சரிவு.

HIGHLIGHTS

புரட்டாசி பிறப்பு : ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மற்றும் விலை சரிவு
X

பவானி ஆட்டு சந்தை.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூதப்பாடி பகுதியில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தைக்கு பவானி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வாடிக்கை. இந்நிலையில் இன்று கூடிய சந்தையில், 200க்கும் குறைவான வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.மேலும் ஆடுகள் வாங்கி செல்லுவதற்காக வியாபாரிகள் பெரும் அளவில் வராததால் அதிகபட்சமாக 2ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஆடுகள் விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், புரட்டாசி மாதம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதனால் அசைவ பிரியர்கள் பெரும்பாலானோர் சைவ உணவிற்கு மாறிவிட்டனர். இதனால் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சி கடைகளில் கூட்டம் குறைய தொடங்கியது. எனவே இன்று கூடிய சந்தைக்கு வியாபாரிகள் பெருமளவில் வரவில்லை. இதனால் அதிகபட்சமாக 2ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஆடுகள் விற்பனையானது என்றார்.

Updated On: 21 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  2. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  7. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  9. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?