/* */

ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் முதல்நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில்  முதல் நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை
X

கொரோனா தாக்கம் காரணமாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும், 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் செயல்பட்டு வந்தன. சாதாரண நாட்களில் ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை வியாபாரம் நடைபெறும். பண்டிகை, விசேஷ நாட்களில் ரூ.10 கோடி வரை வியாபாரம் நடக்கும்.

கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால், ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டன. கிட்டதட்ட 2 மாதங்களுக்கு பிறகு, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 213 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

மதுப்பிரியர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களுக்கு வேண்டிய சரக்குகளை அள்ளிச் சென்றனர். சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. சில இடங்களில் மதுபானங்கள் வாங்கிய மகிழ்ச்சியில், மது பிரியர்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், நேற்று ஒரே நாளில் மட்டும், ரூ.7 கோடியே 1 லட்சத்து 77 ஆயிரத்து 510 - க்கு சரக்குகள் விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக பீர் வகைகள் அதிக அளவில் விற்பனை ஆனதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைப்போல் கூட்டம் அதிகம் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும், டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 6 July 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  8. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  9. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்