/* */

பவானி அருகே வயலில் தீ: ரூ.1 லட்சம் மதிப்பிலான கரும்புகள் கருகின

பவானி அருகே, கரும்பு காட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஒரு லட்சம் மதிப்பிலான கரும்புகள் தீயில் கருகி சாம்பலாகின.

HIGHLIGHTS

பவானி அருகே வயலில் தீ:  ரூ.1 லட்சம் மதிப்பிலான கரும்புகள் கருகின
X

ஈரோடு அடுத்துள்ள நாயக்கன்பாளையம் பகுதியில், வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புகள் எரிந்து சேதமாகின. 

ஈரோடு அடுத்துள்ள நாயக்கன் பாளையம் பகுதியில் வசிப்பவர் குமரேசன். இவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில், ஆலைக்கரும்பு பயிரிட்டு உள்ளார்.

நேற்றிரவு, குமரேசனின் கரும்பு தோட்டத்தில் இருந்து திடீரென பயங்கர புகை வந்துள்ளது. இதையடுத்து, மளமளவென வயலில் தீ பரவ ஆரம்பித்தது. இதில், கரும்புகள் தீப்பற்றி எரிய தொடங்கின.

இச்சம்பவம் குறித்து, அப்பகுதி மக்கள் பவானி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி கரும்புத் தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்புகள் எரிந்து சாம்பலாகின. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 7 Jun 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!