/* */

பண்டிகை காலம் என்பதால் நாட்டு சர்க்கரை , வெல்லம் விலை உயர்வு

ஈரோடு மாவட்டம் சித்தோடு மார்க்கெட்டில் வெல்லம் விலை உயர்வு

HIGHLIGHTS

பண்டிகை காலம் என்பதால் நாட்டு சர்க்கரை , வெல்லம் விலை உயர்வு
X

ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லம் மார்க்கெட்டுக்கு நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 1,500 மூட்டை நாட்டு சர்க்கரை வந்தன. ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,260 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 30 கிலோ எடை கொண்ட, 2,600 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,310 ரூபாய்க்கு விற்பனையானது. அச்சு வெல்லம், 30 கிலோ எடை கொண்ட, 800 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,220 ரூபாய் முதல், 1,280 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், அச்சு வெல்லம் கிலோவுக்கு மூன்று ரூபாய், மூட்டைக்கு, 90 ரூபாய் என உயர்ந்து காணப்பட்டது. நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் ஆகியவை கிலோவுக்கு இரண்டு ரூபாய், மூட்டைக்கு, 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்து காணப்பட்டது. இன்னும், 25 நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், இவற்றின் விலை உயர்ந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 10 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...