/* */

பண்டிகை காலம் என்பதால் நாட்டு சர்க்கரை , வெல்லம் விலை உயர்வு

ஈரோடு மாவட்டம் சித்தோடு மார்க்கெட்டில் வெல்லம் விலை உயர்வு

HIGHLIGHTS

பண்டிகை காலம் என்பதால் நாட்டு சர்க்கரை , வெல்லம் விலை உயர்வு
X

ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லம் மார்க்கெட்டுக்கு நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 1,500 மூட்டை நாட்டு சர்க்கரை வந்தன. ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,260 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 30 கிலோ எடை கொண்ட, 2,600 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,310 ரூபாய்க்கு விற்பனையானது. அச்சு வெல்லம், 30 கிலோ எடை கொண்ட, 800 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,220 ரூபாய் முதல், 1,280 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், அச்சு வெல்லம் கிலோவுக்கு மூன்று ரூபாய், மூட்டைக்கு, 90 ரூபாய் என உயர்ந்து காணப்பட்டது. நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் ஆகியவை கிலோவுக்கு இரண்டு ரூபாய், மூட்டைக்கு, 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்து காணப்பட்டது. இன்னும், 25 நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், இவற்றின் விலை உயர்ந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 10 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
  2. தமிழ்நாடு
    தபால் ஒட்டுகள் இன்றுடன் நிறைவு..!
  3. நாமக்கல்
    மக்களுக்காக இலவச போர்வெல் அமைத்து கொடுப்பேன் : அதிமுக வேட்பாளர்...
  4. ஆன்மீகம்
    வராக அவதாரத்தின் அற்புதத்தை பார்க்கலாம்..!
  5. சினிமா
    சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சில பிரபல நடிகைகள்
  6. அரசியல்
    கோவையில் நடந்த பிரஸ்மீட்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை..!
  7. அரசியல்
    எம்ஜிஆர் கனவை நிறைவேற்ற அம்பையில் மோடி உறுதி..!
  8. லைஃப்ஸ்டைல்
    மறக்க முடியாத மை: மாற்ற முடியாத பச்சை குத்தல்களுக்கான உங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : பெரம்பலூரில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow |...
  10. வீடியோ
    🔴LIVE : தென்காசியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow |...