/* */

பவானி: முககவசம் அணியாமல் செல்லும் பொதுமக்கள்

பவானி பகுதியில் முககவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களால் மீண்டும் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது.

HIGHLIGHTS

பவானி: முககவசம் அணியாமல் செல்லும் பொதுமக்கள்
X
பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பலர் போட்டு கொண்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பலர் பொது இடங்களுக்கு வரும் போது முககவசம் அணிவதில்லை. இதன் காரணமாக மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில் பவானி பகுதியில் பெரும்பாலான பொதுமக்கள் முககவசம் அணியாமலேயே சுற்றி திரிகிறார்கள்.

பவானி புது பஸ் நிலையம் பகுதியில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி முககவசம் அணியாமல் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது குறித்து அக்கறையின்றி காணப்படுகின்றனர். தடுப்பூசி மேற்கொண்டதால் கொரோனா நோய்த் தொற்று கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் இன்னும் முழுமையாக குறையவில்லை. இது போன்ற தருணங்களில் பாதுகாப்பு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பொது இடங்களில் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Updated On: 30 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா