/* */

கள்ளிப்பட்டி அருகில் விபத்தில் பனியன் தொழிலாளி பலி

Died In Accident - கள்ளிப்பட்டி அருகில், பைக்கில் இருந்து தவறி விழுந்த பனியன் தொழிலாளி மீது, மற்றொரு பைக் மோதியதால், பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கள்ளிப்பட்டி அருகில் விபத்தில் பனியன் தொழிலாளி பலி
X

விபத்தில் உயிரிழந்த பனியன் தொழிலாளி சதாமுருகன்‌.

Died In Accident - ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சதாமுருகன் (வயது 30). பனியன் கம்பெனி ஊழியர்.

இவர், நேற்று இரவு தனது பைக்கில் சத்தி - அத்தாணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். தண்ணீர்பந்தல் பகுதி அருகே சென்றபோது, திடீரென சின்னச்சாமி என்பவர் சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது சைக்கிள் மீது பைக் மோதியதில் தடுமாறி சதாமுருகன் கீழே விழுந்ததார். அப்போது, பின்னால் கிறிஸ்டோபர் என்பவர் ஓட்டி வந்த பைக், சதாமுருகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சதாமுருகன் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு