/* */

ஆப்பக்கூடலில் ஆவாரம்பூ, பூலாம் பூ விற்பனை அமோகம்

நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி ஆவாரம் பூ, பூலாம் பூ விற்பனை அமோகமாக நடந்தது.

HIGHLIGHTS

ஆப்பக்கூடலில் ஆவாரம்பூ, பூலாம் பூ விற்பனை அமோகம்
X

விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பூலாம் பூ மற்றும் ஆவாரம் பூ. 

பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான நாளை (வியாழக்கிழமை) போகி பண்டிகை ஆகும். பழையன கழிந்து, புதியன புகும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் புதியவற்றை வரவேற்கும் வகையில், வீட்டின் கூரையில் வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டுவது வழக்கம்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியவற்றை காப்பு கட்ட ஏற்றவாறு சிறு சிறு கட்டுக்களாக கட்டி வியாபாரிகள் ரோட்டோரம் விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஒரு கட்டு ரூ.5-க்கும், 3 கட்டுகள் ரூ.10-க்கும் விற்பனை செய்கின்றனர். இதனை ஆப்பக்கூடல், சக்திநகர் , ஒரிச்சேரி , கீழ்வாணி சுற்று பகுதிகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

Updated On: 12 Jan 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!