Begin typing your search above and press return to search.
அத்தாணி: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது
அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பெரியார் நகரை சேர்ந்தவர் ராசூல்தீன் (வயது 42). இவர் அத்தாணி - கோபி சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் போலீசார் கடையில் சோதனை செய்ததில், 20 பாக்கெட்டுகளில் ரூ.400 மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ராசூல்தீன் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.